Scholars

பாரம்பரியம்

பாரம்பரியம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்புச்
செய்த முதிய ஓய்வு பெற்ற
கலைஞர்கள் மறைந்த கலைஞர்களின் குடும்ப உறுப்பினர்களை நிலையக்
கலையகம் வரச் செய்து
அவர்களது கலைப்படைப்பு
கள் பற்றியும் அவர்களது
வாழ்க்கை வரலாறுகளையும்
வெளிக் கொணர்கிறார்
சகோதரர் கலாபூஷணம்
M.S.M. ஜின்னாஹ்.
இது மறைந்தோரை ஞாபகப்
படுத்துவதும் வாழ்வோரை
வாழ்த்துவதுமாக அமைகிறது.

04/08/2020 அன்று
வரலாற்றில் ஒரு ஏடு புகழ்
கலாபூஷணம் கவிமணி
M.H.M.புஹாரி (பலாஹி)
அவர்கள் பாரம்பரியம்
நேர் காணல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டார்.
அவரை கலாபூஷணம்
M.S.M. ஜின்னாஹ் கலந்துரையாடினார்.

இவர் ஒரு ஆசிரியரும்
கவிஞரும் ஆவார்.
மரபுக் கவிஞர், பேச்சாளர்,
எழுத்தாளர் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்.
தன்னை முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர் மர்ஹூம் Z.L.M. முஹம்மத்
அவர்கள் வரலாற்றில் ஒரு ஏடு மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
முஸ்லிம் சேவையில் அறிமுகம் செய்து வைத்ததாக கூறினார்.

கவியரங்குகள், இஸ்லாமிய நற் சிந்தனைகள், நினைவு
தின பேச்சுக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை வானொலியில்
நடாத்தியுள்ளார். வரலாற்றில் ஒரு ஏடு ஒரு வரலாறையே ஏற்படுத்திக்
கொடுத்தது என்று சொன்னால்
மிகையாகாது.
சகோதரர் ரஷீத் M.ஹபீல்
அவருக்குக் கொடுத்த
உற்சாகம் பற்றியும் நன்றியுடன்
நினைவு கூர்ந்தார்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும்
போது குதுப் நாயகம் என்ற
நூலை உரைநடையில் எழுதி
பல ஆசிரியர்களின் பாராட்டுக்களையும் பெற்றிரிருக்கிறார். அதிகமான நூற்களை எழுதி வெளியிட்டும் உள்ளார்.

இலங்கை இந்திய இஸ்லாமிய மாநாடுகளிளும்
கலந்து கொண்டுள்ளார்.
விடிவெள்ளி பத்திரிகையின்
பிரதம ஆசிரியர்
M.B.M. பைரூஸ் அவர்களின் தந்தை யாவார்.

இப்படி ஆளுமை நிறைந்த
நம் முன்னோர்களை அடையாளம் காட்டுவதோடு
இளம் சமூகத்தினருக்கு படிப்பினையூட்டி வழிகாட்டுவதற்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரிய நிகழ்ச்சி முன் நிற்கின்றது.
பாரம்பரியம் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தவர்
முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர் S.M.HANEEFA
(ஹாபீஸ்) ஆவார். முதன்முதலில் நேர்காணலில் கலந்து கொண்டவர் காதிபுல் ஹக்
S.I. நாகூர் கனி என்பது ஒரு
வரலாற்று சான்று.

நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்
கொண்டிருந்த வேளையில்
இடையில் நிகழ்ச்சி தடைபட
முழுமையாக கேட்க முடியாது போனது பெரும்
குறையே. தடைகளுக்கு
வருந்துகிறோம் என்ற அறிவிப்பாளரது அறிவிப்போடு மீண்டும் தொடரும் என எதிர்ப்
பார்த்தோம் ஏமாற்றமே கிட்டியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும் சகோதரர்
கலாபூஷணம் M.S.M.
ஜின்னாஹ் அவர்களுக்கும்
நிகழ்ச்சியை தொகுத்தளித்த சகோதரி
பாத்திமா ரினூஸியா அவர்களுக்கும் எனது உள்ளத்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

– – – – – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top